பொம்மனூத்துப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

பொம்மனூத்துப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பொம்மனூத்துப்பட்டியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில், பொம்மனூத்துப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது அருகில் உள்ள நாடக மேடை பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தென்னிலை அருகே உள்ள வீரமலை பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சந்திரசேகர், பூபதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, சூதாட்ட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250-யும் பறிமுதல் செய்தனர்.பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி