அப்போது அருகில் உள்ள பெத்தாச்சி நகர், சந்தைப்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடியது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட எருமார்பட்டி, பொத்தாட்சி நகரைச் சேர்ந்த ராமசாமி, கேசவமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 1200ஐயும் பறிமுதல் செய்தனர்.
மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த அரவக்குறிச்சி காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.