அப்போது, அதே சாலையில் கரூர், பள்ளப்பட்டி, மண்மாரி பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா (50) என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம், ராஜேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் ராஜேஷுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல்லில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அறிந்த ராஜேஷின் சகோதரர் விக்னேஷ் (22) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டாட்டா ஏஸ் வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முகமது ஹனிபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.