இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி இரவு 9 மணி அளவில், கரூர்-கோவை சாலையில் இவர்கள் இருவரும் நடந்து சென்றனர். கரப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத 4-சக்கர வாகனம் நடந்து சென்ற இருவர்மீதும் மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல பாண்டுவுக்கு பின்னந்தலையில் அடிபட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் அறிந்த முருகனின் மனைவி சாருமதி வயது 29 அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்த தென்னிலை காவல் துறையினர், உயிரிழந்த முருகன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.