கரூர் மாவட்டத்தை பொருத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் முதல் ஐந்து இடம் பெறும் அளவிற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நேற்று வரை நான்கு தொகுதிகளில் 82 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகத்தான திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீடு வீடாக ஆள் சேர்க்கும் அளவிற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி அவர்களும் உறுப்பினர்கள் சேர்த்து பார்த்தார்கள். சேர்க்க முடியவில்லை. மக்களை சந்திப்பவர்களை பற்றி பேசலாம் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களைப் பற்றி பேசலாம் என்று தெரிவித்த அவர், நம்ம வேலையை பார்க்கலாம் சார் வாங்க என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.