கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, பள்ளமருதபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் வயது 40. இவரது நண்பர் திருச்சி மாவட்டம், துறையூர் முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் பிரபு ராமன் வயது 39. இவர்கள் இருவரும் மார்ச் 10 ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், சின்ன தாதம் பாளையம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குப் பின்னால் வந்த கரூர் மாவட்டம், பவித்திரம், பள்ளமருதபட்டி அருகே உள்ள கிணத்துப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி மனைவி தெய்வானை என்பவர் ஓட்டி வந்த கார், குமரேசன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த பிரபு ராமனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக குமரேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தெய்வானை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.