கரூர்: தம்பியை தாக்கி மிரட்டிய அண்ணன் கைது

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேட்டமங்கலம், பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமு (65). இவரது உடன் பிறந்த சகோதரர் ராமன் (75). இவர்களது குடும்ப சொத்தான ஒரு ஏக்கர் நிலம் தொடர்பாக இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. 

இந்நிலையில் ஜூன் 3-ம் தேதி மாலை 4 மணி அளவில், ராமன் மது போதையில் ராமு வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளைப் பேசி கத்தியால் தாக்கியுள்ளார். மேலும் ராமுவின் மனைவி பாப்பாத்தியையும் கத்தியை காட்டி மிரட்டி துன்புறுத்தியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய காவல்துறையினர், இது தொடர்பாக ராமனை கைது செய்து வரும் 15ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி