கரூர்: டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

முனியப்பன் கோவில் அருகே டூவீலரில் சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன் வயது 35.இவர் பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 7: 30 மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பத்மநாதன் ஓட்டிய டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.இந்த சம்பவம் அறிந்த பத்மநாதன் உறவினர், கரூர் அருகே உள்ள நெரூர், கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த முனுசாமி வயது 31 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி