கரூர்: கஞ்சாவை பதுக்கி வைத்த வாலிபர் கைது

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ராஜசேர்வைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பள்ளப்பட்டி அருகே உள்ள கப்பக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். 

அப்போது, பள்ளப்பட்டி தைக்கால் தெருவைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் வயது 35 என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 500 மதிப்புள்ள 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி