கரூர்: வங்கி அருகே நின்றிருந்த பெண் மீது மீது கார் மோதி விபத்து

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தென்னிலை தெற்கு, சாலைதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சித்ரா வயது (47). இவர் ஏப்ரல் 2-ம் தேதி காலை 7:45 மணி அளவில், தென்னிலை எஸ்பிஐ வங்கி அருகே நின்றுகொண்டு இருந்தார். 

அப்போது திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நடராஜன் (வயது 52) என்பவர் வேகமாக ஓட்டிவந்த கார் நின்றுகொண்டிருந்த சித்ரா மீது மோதி விபத்து ஏற்பட்டது. உடனடியாக சித்ராவை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த செந்தில்குமார் இதுதொடர்பாக அளித்த புகாரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி