இந்த நிலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது. திற்பரப்பு அருவிப்பகுதியில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தாலும் தொடர்ந்து வறண்ட வானிலே நிலவி வருகிறது. மலைகளில் இருந்து வரும் நீரோடைகள், நீரூற்றுகள் வறண்டு விட்டதால் கடந்த சில மாதங்களாகவே ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த திற்பரப்பு அருவியில் தற்போது மிக குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் தண்ணீர் விழுகிறது. மற்றப்பகுதிகளில் இருந்து தண்ணீர் இல்லாமல், எங்கும் பாறையாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் விடுமுறை நாள் என்பதால் காலி முதல் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்