அப்போது அந்த காரில் மூடை மூடியாக ரேஷன் அரிசி காணப்பட்டது. இதை அடுத்து வாகனத்தை டிரைவருடன் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் கோட்டார் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட ஆயிரம் கிலோ ரேஷன் அரிசிகள் காணப்பட்டது.
இதையடுத்து போலீசார் கார் டிரைவர் கோட்டாறு பகுதி அசோக் (29) என்பவரை கைது செய்து, அரிசியை வாகனத்துடன் உணவு கடத்தல் தடுப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.