தற்போது இரண்டு வருடம் ஆகியும் சந்தியாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து பணத்தை ராணி கேட்டபோது கணவர் மணியன் மற்றும் மகன் விபின் ஆகியோர் சேர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பளுகல் பகுதி ஸ்ரீலதா (39) என்பவரிடமும் ராணி ரூபாய் 6 லட்சத்து 61 ஆயிரம் கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்கவில்லையாம்.
இது தொடர்பாக சந்தியாவும் ஸ்ரீலதாவும் சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பளுகல் போலீசார் ராணி, மணியன், விபின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.