இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சிகாமணி (70) என்பவரை, அவரது மகன் சுனில் குமார் (37) சொத்து தகராறில் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடினார். குடும்பத்தினர் சிகாமணியை மருத்துவமனையில் சேர்த்தனர். சுனில் குமாரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சை பலனின்றி சிகாமணி நேற்று (நவம்பர் 13) உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.