இந்த நிலையில் நேற்று (ஜூன் 4) மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வல்சலா கல்லால் மேரி ஸ்டெல்லாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேரி ஸ்டெல்லா தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வல்சலா அவரது கணவர் லூகாஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.