இதனால் பாலத்தின் வழியாக வாகனங்களோ பொதுமக்களோ கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மேம்பாலத்தை சமூகவிரோதிகள் உடைத்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினரும், பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ், திமுகவினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். பின்னர் இயந்திரங்கள் உதவியுடன் சேதம் அடைந்த பகுதியை அகற்றும் பணியை மேற்கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (2 -ம் தேதி) மீண்டும் பாலத்தின் நடுப்பகுதி உடைந்து சேதமாகியுள்ளது. சேதப் பகுதியில் பேரி கார்டு வைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.