இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் மகளிடம் தொடர்ந்து விசாரித்தபோது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது இதுபோன்று தந்தை தனியாக வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி பெற்ற மகளைப் பலாத்காரம் செய்த தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்