இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிவாசலில் வழக்கம்போல் தொழுகை நடைபெற்றது. அப்போது வக்கீல் சர்தார் ஷா (50) நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கான அரிசியை வழங்கிக்கொண்டிருந்தார். அந்தநேரம் அங்கு வந்த ஷேக் முகமது உட்பட 12 பேர் சேர்ந்து கம்பியால் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதுபோலவே சர்தார் ஷா உட்பட 6 பேர் ஷேக் முகமதுவைத் தாக்கினார்களாம். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் மாறிமாறிப் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இருதரப்பைச் சேர்ந்த 18 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்