கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று (26-ம் தேதி) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக செயல்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக உறுதியாக இருப்பதாக கிரிஷ் சோடங்கர் கூறியது அவரது சொந்த கருத்து என்றும், இது குறித்து தேசிய தலைமை தான் இறுதி முடிவை எடுக்கும் என்றும் விஜய் வசந்த் கூறினார்.