கடந்த மாதம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மார்த்தாண்டம் பகுதியில் பைக் ஓட்டிய சிறுவனை பிடித்து விசாரித்த போது, சிறுவனுக்கு 17 வயது தான் ஆகி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனின் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டம் 199ஏ பிரிவின் கீழ் சிறாருக்கு விதி மீறி வாகனம் ஓட்ட கொடுத்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குழித்துறை ஜேஎம்2 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிமன்றம் சிறுவனின் பெற்றோருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த சிறுவனின் தாய் ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் உட்கார வைத்து கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?