கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணியானது மரியகிரி, சூரியகோடு, தூத்தூர், ஏழுதேசப்பற்று மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சென்று கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. 11 தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி அதிகாரி சூர்யபிரகாஷ் ரெட்டி பேரணியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். பேரணியின் போது பேசிய டிஎஸ்பி, மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து எங்காவது கவனித்தால் 10581 என்ற எண்ணிலோ, 8122223319 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை பேரணியின் போது மாணவர்கள் கிராமங்களில் விநியோகம் செய்தனர். பேரணியின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்