இதனால் டெண்டர் கிடைக்காத ஒப்பந்ததாரர்களுக்கும் ஏற்கனவே டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சில கவுன்சிலர்களும் சில ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு கோப்புகள் சேதப்படுத்தப்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து பேரூராட்சித் தலைவி பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் சேதப்படுத்தியதாக ஒப்பந்ததாரர்கள் வினோ, கிறிஸ்துராஜ், விஜயகுமார் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்