குமரி அறிவியல் பேரவை சார்பில் மூன்று பேருக்கு காந்தியசேவை விருது வழங்கப்பட்டது.
நடமாடும் நூலகம் பேராசிரியர் இரா. தியாகசுவாமி நினைவு காந்திய சேவை விருது மொழித் தொண்டுக்காக பைங்குளம் சிகாமணி என்பவருக்கும், கல்வித் தொண்டுக்காக முகிலை இராஜபாண்டியன், சமூகத் தொண்டுக்காக டாக்டர் குமாரதாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்திய மருத்துவசங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் விஜயகுமார் வழங்கினார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார்.