கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புண்ணியம் பகுதியில் பைக் மற்றும் கார் மோதியதில் கடையல் பகுதியை சேர்ந்த சதிஷ் குமார் என்பவர் பலத்த காயமடைந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.