இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (அக்.,3) திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை பாறசாலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அதுல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என பளு கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.