இது குறித்து மக்கள் பிரதிநிதிகள், மற்றும் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது பள்ளம் 5 அடிக்கு மேல் பெரிய பள்ளமாக மாறி உள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் உடைந்து விடும் நிலையில் காணப்படுகிறது.
வேன்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அந்த வழியாக போக முடியாமல் சிரமப்படுகின்றனர். அதை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.