மோதிரமலை: பாலம் கட்டும் பணியினை கலெக்டர் ஆய்வு

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 88 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஓடை குறுக்கு பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை எவ்வித தொய்வுமின்றி, தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் துறை சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி