அப்போது அவரது அண்ணன் கண்ணதாசனும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த பாபு தாஸ் மற்றும் அவரது மனைவி ராணி (54) ஆகியோர் சேர்ந்து கண்ணதாசனைப் பார்த்து கெட்ட வார்த்தைகளைப் பேசியுள்ளனர். மேலும் இருவரும் கண்ணதாசனைக் கீழே தள்ளிச் சரமாரியாகத் தாக்கினார்களாம்.
இதில் காயமடைந்த கண்ணதாசன் குழுத்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில் பாபு தாஸ், ராணி மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.