இதில் குலசேகரம் அருகே நாகக்கோடு, அம்பலத்து விளைப் பகுதி சேர்ந்த மளிகை கடை நடத்திவரும் சந்திரசேகரன் (52) என்பவர் மூலம் மாணவர்களுக்கு குட்கா விற்கப்படுவது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் சந்திரசேகர் கடை மற்றும் வீட்டில் நேற்று (மார்ச் 26) அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவருடைய வீட்டில் 12 சாக்கு பைகளில் விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூபாய் 79 ஆயிரத்து 200 ஆகும். இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் சந்திரசேகரனை கைது செய்தனர்.