இதை அடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து சுமார் 35 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. மேலும் கொள்ளையர்கள் சில நகைகளை கொண்டு செல்லாமல் வீட்டில் வீசி எறிந்துள்ளனர். இது குறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகின்றனர்.
Motivational Quotes Tamil