நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளநீர் விலை உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை 30-40 ரூபாய்க்கு விற்ற இளநீர், தற்போது 50-60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும், வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் வரத்து குறைந்ததாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.