நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 25) ஆர். அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மொத்தம் 339 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.