கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் பகுதியில் மரம் ஒன்று முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.