நாகர்கோவில்: போக்குவரத்து விதிகளை மீறிய மினி பஸ் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பென்ஷமின் தலைமையில் போலீசார் நேற்று கோட்டார் ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்றுகொண்டிருந்தது. 

சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த மினிபஸ் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த மினிபஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி மாற்று வழித்தடத்தில் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து மினிபஸ்சை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி