நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று ஆராட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த மிக்கேல்ராஜ் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.