தாராபுரம் முத்து நகரைச் சேர்ந்த முருகானந்தம் என்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் நேற்று (ஜூலை 30) ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். இதைப் போல், குழித்துறை, பத்மநாபபுரம், பூதப்பாண்டி மற்றும் இரணியல் நீதிமன்றங்களையும் வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர். இந்த புறக்கணிப்பில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.