அவரது அறிவு, துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாக மனோபாவம் நமக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன. தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொண்டு, அநீதிக்கு எதிராகப் போராடி, அன்பு, அமைதி, சமூக நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவை செழித்தோங்கவும், ஒடுக்கப்பட்டோர் உயரவும், நீதி வெற்றி பெறவும் தியாக உறுதியேற்போம். இந்நன்னாளில், உலகெங்கும் அமைதி, மனிதநேயம், மத நல்லிணக்கம் தழைக்கவும், குறைகள் நீங்கி மக்கள் நிறைவான வாழ்வு பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி