கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் அடிதடி, திருட்டு, கொள்ளை ஆகிய குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் எடுத்து வருகிறார். இந்த நிலையில் மக்கள் நலன் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பது தொடர்பாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் கூடுதலாகக் கண்காணிக்க, 'ஒரு கிராமம் ஒரு காவலர்' என்ற அடிப்படையில் ஊர் கண்காணிப்புத் திட்டத்தை நேற்று சுசீந்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுவிளை கிராமத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.