மேலும் தற்போது பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து நல்ல இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பாக சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாகர்கோவில் மீனாட்சிபுரம் அருகே அமைந்துள்ள நடராஜபுரம் என்ற பகுதியில் மழையின் காரணமாக ஓடை உடைப்பு ஏற்பட்டு சாக்கடை மழை நீர் கலந்து அப்பகுதியில் உள்ள தெருக்களில் இந்த நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். திடீரென பெய்த மழையின் காரணமாக சற்று மாவட்டம் முழுவதும் தற்போது வெப்பமும் தணிந்துள்ளது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!