கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சப் இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் சோழராஜா கோவில் அருகே தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றுள்ளார். அப்போது அவரை அஜித், செல்வ பிரபு, ஆறுமுக முத்துப்பாண்டி, செல்வ சூரிய பிரகாஷ் ஆகியோர் ஆபாசமாக பேசி கல்லால் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.