கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் முதலியார் புதுத்தெருவை சேர்ந்தவர் ஹரிரங்கநாதன் (வயது58). இவர் நாகராஜாகோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் வேலை பார்த்த வங்கியில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹரி ரங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.