கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் (மார்ச் 19) வருமான வரித்துறையின் சேவை மையத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடி அனைவரும் வருமான வரிக் கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சஞ்சய்ராய், வருமான வரித்துறை தலைமை ஆணையர் வசந்தன் மற்றும் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.