நாகர்கோவில் அருகே மது விற்ற தொழிலாளி கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வல்லன்குமாரன்விளை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லிங்கபிரபு (50) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் மறைத்து வைத்திருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி