குமரி: புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் இன்று (அக்.,3) மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன் (அகஸ்தீஸ்வரம்). ரவி (குளச்சல்) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் 3 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டதுடன் 2 உணவகங்களுக்கு மொத்தம் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி