ஆனால் கஞ்சா எதுவும் கிடைக்கவில்லை. அப்போது ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் ஒரு பை கேட்பார்ற்று கிடந்தது. போலீசார் அதனை கைப்பற்றி சோதனையிட்ட போது, அதில் ½கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் யாரோ மர்ம நபர் கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்து, போலீசாரை கண்டதும் நடைமேடையில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த நபரை தேடி வருகிறார்கள்.