சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றவுடன் அந்த வாலிபர் கையில் கிடைத்த பணத்தினையும் தங்கச் சங்கிலியையும் எடுத்துக்கொண்டு ஓடினார். இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருடியவர் அழகன்பாறை அருகே உள்ள காளிவிளை பகுதி டேவிட் ராஜ் (35). என்பது தெரிய வந்தது. இதற்கிடையே டேவிட் ராஜ் திருடிய தங்க செயினை ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து அதில் கிடைத்த காசினை மது அருந்திவிட்டு மீதி தொகையை திங்கள் நகர் பேருந்து நிலையத்துக்குள் சென்று வீசி ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து போலீசார் அவனை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.