விழாவில் 13ஆம் தேதி வரை தினமும் இரவு மவுலீது ஓதுதல், 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மார்க்க பேருரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்க அறிஞர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். 14ஆம் தேதி இரவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞான புகழ்ச்சி பாடுதல் நடைபெறுகிறது. 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், 17ஆம் தேதி மூன்றாம் சிராயத் நேர்ச்சை வழங்குதலும் நடைபெறுகிறது. தர்கா நிர்வாகம் தற்போது மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக கல்குளம் தாசில்தாரை தலைவராகக் கொண்டு இயங்கும் விழா குழுவினர் விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்