இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் லில்லி தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். மேலும் அவரது வீட்டின் முன்புறம் வீட்டுடன் சேர்ந்த கோவிலுக்கும் தீ வைத்துச் சென்றுள்ளனர்.
இதைப் பொதுமக்கள் உடனே கவனித்ததால் தீ பரவும் முன்பாகவே அணைக்கப்பட்டது. இதனால் லில்லியும் மயிரிழையில் உயிர் தப்பினர். இதுகுறித்து லில்லி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.