தக்கலை மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 198 பள்ளிகளைச் சேர்ந்த 563 வாகனங்களில் 336 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. மீதமுள்ளவை இன்று ஆய்வு செய்யப்படுகின்றன. வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) சுரேஷ்பாபு, டிஎஸ்பி பார்த்திபன், மாவட்ட கல்வி அலுவலர் அஜிதா, தீயணைப்பு அலுவலர் ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் மூலம் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்பட்டன.