கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த வேளிமலை எஸ்டேட் மேற்பார்வையாளர் சிசிலின் மகள் சீமா, அதே பகுதியைச் சேர்ந்த லாலின் என்பவரைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிசில் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், காதலன் வீட்டிற்குச் சென்று அங்கு இல்லாததால், வீட்டை உடைத்து சூறையாடினர். இது குறித்து கொற்றிக்கோடு போலீசார் சிசில் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.